Friday, December 28, 2018

மசியல் வகைகள் செய்வது எப்படி? (முளைக்கீரை, சேனைக்கிழங்கு மசியல்)

      இக்கட்டுரையில் நாம் காணப்போவது  முளைக்கீரை  மற்றும் சேனைக்கிழங்கில் மசியல்  செய்வதற்கான  சில சமையல் குறிப்புகள்.

 

முளைக்கீரை  மசியல்

தேவையானவை

   முளைக்கீரை  ஒரு கட்டு,  தேங்காய் எண்ணெய்  இரண்டு ஸ்பூன்,  நெய் இரண்டு ஸ்பூன்,   கடுகு ஒரு ஸ்பூன்,  காய்ந்த  மிளகாய்  நான்கு,  தேவையான அளவு உப்பு.

செய்முறை

    கீரையை நன்கு  அலசி  ஆய்ந்து  பொடியாக நறுக்கவும்.   தேவையான அளவு தண்ணீர் விட்டு  குக்கரில் 1 விசில் விட்டு வேக வைக்கவும். பின்பு  கீரையை தண்ணீர் இல்லாமல் ஒரு தட்டில் ஆற வைக்கவும்.  பின்பு  அதை மிக்சி  ஜாரில் போட்டு சிறிது  உப்பு சேர்த்து  ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். பின்  கடாயை  அடுப்பில் வைத்து  தேங்காய் எண்ணெய் நெய்  ஊற்றி சூடானவுடன்  கடுகு காய்ந்த மிளகு போட்டு  தாளித்து கீரை  மசியலை  கடாயில் ஊற்றி  ஒரு தடவை கிளறி  இறக்கவும். இந்த மசியல் வற்றல்  குழம்பு  சாதத்துக்கு தொட்டுக் கொள்ள  சூப்பராக  இருக்கும்.   சாதத்தில்  போட்டு பிசைந்து சாப்பிடலாம்.  முளைக்கீரை   உடலுக்கு  குளிர்ச்சியை  தரக்கூடியது.  இது  கோடைகால  வெயிலுக்கு உகுந்த சமையல்.

சேனைக்கிழங்கு  மசியல்

தேவையானவை

    சிறுதுண்டுகளாக  நறுக்கிய சேனைக்கிழங்கு  ஒரு கப்,  துவரம் பருப்பு  கால் கிலோ,  பச்சை மிளகாய்  மற்றும் மிளகாய் வத்தல் மூன்று,   தேவையான அளவு உப்பு,  மஞ்சள் தூள்  கால் ஸ்பூன்,  புளி  எலிமிச்சை அளவு.
தாளிக்க:  கடுகு  மற்றும்  உலுந்தம் பருப்பு  அரை ஸ்பூன்,  தேவையான அளவு உப்பு, எண்ணெய் 1 டீஸ்பூன், சிறிதளவு  கொத்தமல்லி  மற்றும் கறிவேப்பிலை,
 துவரம்பருப்பு  1 டீஸ்பூன்,  பெருங்காயம்  கால் டீஸ்பூன்.

செய்முறை

    சேனைக்கிழங்குகளை  தோல் சீவி  நன்றாகக்  கழுவவும். குக்கரில் கிழங்கு, பருப்பு இரண்டையும்  தனித்தனியே  வேகவைத்து  எடுத்துக் கொள்ளவும். பிறகு,  கிழங்கை மட்டும் தனியாக ஒரு பாத்திரத்தில்  போட்டு  நன்றாக மசித்து புளியை   கரைத்து  ஊற்றி  மஞ்சள் தூள்,  உப்பு சேர்த்து  கொதிக்க  வைக்கவும்.  கொதித்ததும் அதில் வெந்த துவரம்  பருப்பை  சேர்க்கவும்.  கொதிவரும்போது, எண்ணெயில்  கடுகு,  பச்சை மிளகாய், மிளகாய் வத்தல், பெருங்காயம்,  துவரம் பருப்பு,   கறிவேப்பிலை  தாளித்து  கொட்டி இறக்கவும்.
    
    மேலும்  இது போன்ற சமையல் குறிப்புகள் மற்றும் மருத்துவக் குறிப்புகள், ஹெல்த் டிப்ஸ்,  அழகுக் குறிப்புகள், போன்றவற்றை  தெரிந்து கொள்ள இந்த இணயதளத்தை  பின்பற்றவும். மேலும் உங்களுக்கு வேரேதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கமென்ட் செய்யவும்.  மேலும் எங்களை ஃபேஸ்புக்கிலும்  தொடர்பு  கொள்ளலாம்.

நண்டு வறுவல், நண்டு குழம்பு, நண்டு மசாலா செய்வது எப்படி?

      இக்கட்டுரையில் நாம் காணப்போவது  நண்டு  வறுவல்,  நண்டு குழம்பு,  நண்டு மசாலா போன்றவற்றை  செய்வதர்க்காண  சமையல் குறிப்புகள்.

 நண்டு வறுவல்

தேவையானவை

     பெரிய  நண்டு  ஐந்து,  மிளகாய்  வற்றல்  எட்டு, ஒரு  டீஸ்பூன் சீரகம்  மற்றும் கடுகு,  வெங்காயம்  ஆறு,  மல்லி  இரண்டு,  தேங்காய்சில்  இரண்டு,  தேவையான அளவு உப்பு.

செய்முறை

    நண்டுகளை சுத்தம் செய்து துண்டுகளாக  வெட்டிக் கொள்ளவும். மிளகாய்  வற்றல்,  மல்லி,  சீரகம், கடுகு, வெங்காயம், தேங்காய்சில்  இவற்றை நன்கு  அரைத்துக் கொள்ளவும். இதை நண்டுடன் சேர்த்துக் கொள்ளவும். தேவையான உப்பு, மஞ்சள் தூள் போட்டு பிரட்டி  15 நிமிடங்கள்  ஊற வைக்கவும். வாணலியில் எட்டு கரண்டி எண்ணெய் ஊற்றி  காய்ந்ததும்  நண்டைப் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.

நண்டு  குழம்பு

தேவையானவை

    நண்டு அரைகிலோ,  சின்ன வெங்காயம் நூறு  கிராம், தக்காளி  ஒன்று,  பூண்டு பத்து பல்,  பெரிய நெல்லிக்காய் அளவு புளி,  வத்தல்  25,  மிளகு  ஒரு ஸ்பூன், மஞ்சள்தூள்  சிறிதளவு,  தேங்காய்  அரை மூடி, கசகசா அரை ஸ்பூன்,  எண்ணெய்   ஐந்து ஸ்பூன்,  தேவையான அளவு உப்பு,  தாளிக்க வெந்தயம்   சோம்பு  சீரகம் சிறிதளவு.

செய்முறை

     நண்டை உடைத்து சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பூண்டு,   நறுக்கிக் கொள்ளவும்.  வரமிளகாய்,  மிளகு, சோம்பு, கசகசா, தேங்காய், புளி, உப்பு  ஆகியவற்றை நைசாக  அரைத்துக் கொள்ளவும்.  அடுப்பில் வாணலியில் வைத்து எண்ணெய் ஊற்றி  வெந்தயம்   சோம்பு  சீரகம் ஆகியவற்றை சேர்த்து வெங்காயம், தக்காளி, பூண்டு,  கறிவேப்பிலை  போட்டு வதக்கியவுடன்  நண்டையும்   போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.  பிறகு அரைத்து  வைத்துள்ள  மசாலாவைப்  போட்டு  வதக்கி  மூன்று  டம்ளர்  தண்ணீர் விட்டு மூடி வைக்கவும்.  சிறிது  கெட்டியாக  வந்தவுடன்  இறக்கவும்.

நண்டு மசாலா

தேவையானவை

    நண்டு மூன்று,  பெரிய வெங்காயம் இரண்டு,  பூண்டு ஒரு பல்,  இஞ்சி 1துண்டு,  மிளகுத்தூள்  மற்றும்  தனியா தூள் அரை டேபிள்ஸ்பூன்,  குடை மிளகாய்  ஒன்று,  மிளகாய்த்தூள்  1 டேபிள்ஸ்பூன்,  பச்சை மிளகாய் இரண்டு, தக்காளி இரண்டு,  தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய்,  சோளமாவு  சிறிதளவு.

செய்முறை

     நண்டை  சுத்தம் செய்து சோளமாவில் புரட்டி  வைக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்  நைசாக  அரைத்துக் கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் போட்டு  வதக்கவும்.  அடுத்து  இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்  விழுதை  போட்டு பச்சை  மணம்  போகும் வரை வதக்கவும். நறுக்கிய   குடை மிளகாயை  தக்காளி சேர்த்து வதக்கவும்.  பின்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள்,  தனியா தூள், உப்பு, சேர்த்து இரண்டு  டம்ளர்  வெந்நீர் ஊற்றி கொதிக்க  விடவும்.  கலவை   கெட்டியானவுடன்,  இதில்  நண்டுகளை  போட்டு வேக விடவும்.  நண்டு  நன்றாக  வெந்து  சுண்டியவுடன்  இறக்கி சூடாக  பரிமாறவும்.
     
    மேலும்  இது போன்ற சமையல் குறிப்புகள் மற்றும் மருத்துவக் குறிப்புகள், ஹெல்த் டிப்ஸ்,  அழகுக் குறிப்புகள், போன்றவற்றை  தெரிந்து கொள்ள இந்த இணயதளத்தை  பின்பற்றவும். மேலும் உங்களுக்கு வேரேதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கமென்ட் செய்யவும்.  மேலும் எங்களை ஃபேஸ்புக்கிலும்  தொடர்பு  கொள்ளலாம்.

முருங்கைக்காய் தக்காளி மற்றும் கோங்குரா தொக்கு செய்வது எப்படி?

    இக்கட்டுரையில் நாம் காணப்போவது  முருங்கைக்காய் தக்காளி  மற்றும் கோங்குரா தொக்கு செய்வது எப்படி என்பதற்கான  சமையல் குறிப்புகள்.

 

முருங்கைக்காய் தக்காளி தொக்கு

தேவையானவை

     முருங்கைக்காய்  ஐந்து,  வெங்காயம் இரண்டு,  தக்காளி மூன்று,  கறிவேப்பிலை தேவையான அளவு,  மஞ்சள் தூள்  அரை டீஸ்பூன்,  மிளகாய் தூள்  இரண்டு ஸ்பூன்,  உப்பு தேவையான அளவு, எண்ணெய்  இரண்டு ஸ்பூன், கடுகு  உளுந்தம் பருப்பு தேவையான அளவு தாளிப்பதற்காக.

செய்முறை

    முருங்கைக்காயினை பெரிய  பெரிய  துண்டுகளாக  வெட்டிக் கொள்ளவும். தக்காளியினை  பொடியாக  நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில்  முருங்கைக்காயை வேக விடவும். காய்   நன்றாக வெந்தவுடன்  ஆரவைத்து  சதை பகுதியினை மட்டும் எடுத்துக்  கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி  கடுகு  உளுந்து சேர்த்து  தாளிக்கவும்.  அத்துடன்  பொடியாக நறுக்கிய  வெங்காயம்  கறிவேப்பிலை  சேர்த்து  வதக்கவும்.  வெங்காயம் சிறிது  வதங்கிய பிறகு அத்துடன் தக்காளி,  மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இத்துடன்  முருங்கைக்காய்  வேகவைத்த தண்ணீர்  சேர்த்து கொதிக்க விடவும்.  கொதித்தவுடத் எடுத்து வைத்துள்ள  முருங்கைக்காய்  சதை பகுதியினை சேர்த்து ஐந்து நிமிடங்கள்  வேகவைத்து இறக்கவும்.

 

கோங்குரா  தொக்கு

தேவையானவை

    புளிச்சக்கீரை  இரண்டு கப், அரை கப்  தனியா, சீரகம்  அரை கப், காய்ந்த மிளகாய் 15,  வெந்தயம்  ஒரு ஸ்பூன்,  பூண்டு  பல் 15, புளி தேவையான அளவு, உப்பு, நல்லெண்ணெய்,  கடுகு தேவையான அளவு.

செய்முறை

    எண்ணெயில்  தனியா, சீரகம்,   காய்ந்த மிளகாய்,  வெந்தயம் வறுத்து மிக்ஸியில் பொடியாக்கவும். கடாயில்  எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய கீரையும் பூண்டும்  வதக்கவும் இதனுடன் புளி,  உப்பு  சேர்த்து வதக்கவும்  இதில்  அரைத்து  பொடியை  தூவி கிளறவும்.
மேலும்  சமையல் குறிப்பு,  மருத்துவக் குறிப்பு, அழகுக் குறிப்பு போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த இணயதளத்தை பின்பற்றவும்.

  மேலும்  இது போன்ற சமையல் குறிப்புகள் மற்றும் மருத்துவக் குறிப்புகள், ஹெல்த் டிப்ஸ்,  அழகுக் குறிப்புகள், போன்றவற்றை  தெரிந்து கொள்ள இந்த இணயதளத்தை  பின்பற்றவும். மேலும் உங்களுக்கு வேரேதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கமென்ட் செய்யவும்.  மேலும் எங்களை ஃபேஸ்புக்கிலும்  தொடர்பு  கொள்ளலாம்.

வெள்ளரிக்காய், சேமியா, முட்டைக்கோஸ், மற்றும் தக்காளிகளில் சூப் செய்வது எப்படி?

       இக்கட்டுரையில் நாம் காணப்போவது  சூப் வகைகள் செய்வது எப்படி  மற்றும் அதற்கான  சமையல்  குறிப்புகள்.

 வெள்ளரிக்காய் சூப்

தேவையானவை

    துருவிய  வெள்ளரிக்காய்  ஒன்று,   வெண்ணெய்  இரண்டு  டேபிள்ஸ்பூன்,  பல காய்கறிகள்  போட்டு வேக வைத்த நீர் ஒரு கப்,  வெங்காயம்  ஒன்று,  பாலேடு  இரண்டு  டேபிள்ஸ்பூன்,  மைதாமாவு   ஒரு கரண்டி,  உப்பு  மற்றும் மிளகுத் தூள்  தேவையான அளவு.

செய்முறை

   வெங்காயத்தை  வெண்ணெயில் இட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பிறகு வெள்ளரிக்காயைப்   போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.  மாவையும் சேர்த்து நன்கு கலக்கவும்.  காய்கறி வேகவைத்த  நீரைச்சேர்த்து   பத்து நிமிடங்கள்   கொதிக்க விடவும்.  உப்பு,  மிளகுத்தூள்  சேர்க்கவும்,  பிறகு பாலேட்டையும் சேர்க்கவும்.

சேமியா  சூப்

தேவையானவை

   சேமியா  நூறு கிராம், வெண்ணெய்  இரண்டு  டேபிள்ஸ்பூன், காய்கறிச்சாறு  மூன்று  கப்,  தேவையான அளவு மிளகுத்தூள்.

செய்முறை

   சேமியாவை,  காய்கறிச்  சாருடன்  சேர்த்து வேக வைக்க  வேண்டும். வெண்ணெயை  சூப்பில் சேர்த்து  மேலும் சிறிது  நேரம்  கொதிக்க விடவும். சூடாகப்  பரிமாறினால்  சுவையாக இருக்கும்.

முட்டைக்கோஸ்  சூப்

தேவையானவை

   முட்டைக்கோஸ்  ஒன்று,  வெண்ணெய்  இரண்டு  கரண்டி, பால் நூறு மி.லி., உருளைக்கிழங்கு ஒன்று,   உப்பு  மற்றும் மிளகுத்தூள்  தேவையான அளவு.

செய்முறை

    முட்டைக்கோசைப்  பொடியாக நறுக்கி,  அடுப்பில் வாணலியை  வைத்து,  நறுக்கிய கோஸை வெண்ணெய் விட்டு  வதக்கவும்.  காய்கறிகள்  குழைய  வெந்தவுடன்  வடிகட்டியால்  வடிகட்டவும்.  வடிகட்டி  வைத்துள்ள சாற்றில் பாலையும், உப்பு, மிளகுத்தூள்  ஆகியவற்றைச்  சேர்த்து சிறிது  நேரம்  அடுப்பில்  வைத்துக் கொதிக்க விட்டு  இறக்கி  விடவும்.  சூப்  மீது  வடிகட்டி எடுத்து வைத்துள்ள  கோஸைத்  தூவிப்  பரிமாறவும்.

தக்காளி  சூப்

தேவையானவை

   பால்  750 மி.லி.,  தக்காளி  முக்கால் கிலோ,  சர்க்கரை ஒரு சிட்டிக்கை,  ரொட்டி   துண்டுகள்  ஆறு,  உப்பு  மற்றும் மிளகுத்தூள்  தேவையான அளவு.

செய்முறை

   தக்காளியை  சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.  பாலையும்,  தக்காளியையும்  நன்றாக கலந்து  அடுப்பில்  மிதமான சூட்டில்  வைக்க வேண்டும். பாலை அதிகமாக  கொதிக்க விடாமல்  நன்றாக சூடாக்க வேண்டும்
மிளகுத்தூள்,  சர்க்கரை,  உப்புத்தூளை   ரொட்டித்துண்டுகளுடன்  சேர்த்து  உட்கொள்ள  மிகவும்  சுவையாக இருக்கும்.
       மேலும்  இது போன்ற சமையல் குறிப்புகள் மற்றும் மருத்துவக் குறிப்புகள், ஹெல்த் டிப்ஸ்,  அழகுக் குறிப்புகள், போன்றவற்றை  தெரிந்து கொள்ள இந்த இணயதளத்தை  பின்பற்றவும். மேலும் உங்களுக்கு வேரேதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கமென்ட் செய்யவும்.  மேலும் எங்களை ஃபேஸ்புக்கிலும்  தொடர்பு  கொள்ளலாம்.

வாழைத்தண்டு மற்றும் விலாம்பழத்தின் நன்மைகள்

     
     இக்கட்டுரையில் நாம் காணப்போவது நம் உடலுக்கு  உண்ணத் தகுந்த வாழை தண்டு   மற்றும்  விலாம்பழத்தின் மருத்துவ நன்மைகள்.




 வாழைத்தண்டின்  மகத்துவம்

  •  வாழைத் தண்டின்  சாறு  பல  நோய்களுக்கு மகத்தான  மருந்தாக இருப்பது நாம் பலருக்கும் தெரியும்.  ஆனால் நமக்குத்  தெரியாத  பல  மகத்துவங்களை கொண்டிருக்கிறது  வாழைத் தண்டு.
  • பொதுவாக நாம் வாழைத்தண்டை பொரியல், எட்டு  கூட்டு,  சாம்பாராக செய்து சாப்பிடுவது வழக்கம்.  சிறுநீரக கற்களைக்  கரைக்க வாழைத்தண்டு  சாறெடுத்து அருந்துவார்கள்.  சரியாக சிறுநீர்  வராதவர்கள்  வாழைத்தண்டை சாப்பிட்டால் சிறுநீர்  தாராளமாகப் பிரியும். மலச்சிக்கலைப் போக்கும்.  நரம்புச் சோர்வையும்   நீக்கும்.
  • வாழைத்தண்டு   நார் சத்து மிக்கது. வாழைத்தண்டு குடலில் சிக்கிய  மணல் கற்களை விடிவிக்கும்  ஆற்றலை கொண்டது.
  • வாழைத்தண்டுச் சாற்றை இரண்டு   அல்லது  3 அவுன்ஸ்  வீதம்  தினமும் குடித்து வந்தால்,  அடிக்கடி வரும் வரட்டு இருமல் நீங்கும்.
  • நல்ல பாம்பு  கடிக்கு வாழைத்தண்டுச்  சாற்றை  1 டம்ளர்  வீதம் கொடுத்தால்  விஷம்  தானாக  இறங்கிவிடும்.

 

விளாம்பழத்தின் மகத்துவம்

  • அஜீரண  குறைபாட்டை  போக்கி  பசியை  உண்டுபண்ணும்  ஆற்றலும்  விளாம்  பழத்திற்கு  உண்டு.
  • விளாம்பழம்  பல வியாதிகளை  குணப்படுத்தும்  சிறந்த பழமாகும். இதில் இரும்புச்சத்து,  சுண்ணாம்புச்சத்து,  வைட்டமின் ''ஏ''  சத்தும்  உள்ளது. இப் பழத்துடன்  வெல்லம் சேர்த்து  பிசைந்து  21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம்  சம்மந்தமான  அனைத்து  கோளாறுகளும்  குணமாகும்.
  • பித்தத்தால் தலை வலி,  கண்பார்வை  மங்கல்,  காலையில்  மஞ்சளாக  வாந்தி எடுத்தல்,  சதா வாயில் கசப்பு,  பித்த  கிறுகிறுப்பு,  கை கால்களில்  அதிக  வேர்வை,  பித்தம் காரணமாக  இளநரை,  நாவில்  ருசி  உணர்வு  அற்ற  நிலை இவைகளை  விளாம்பழம்  குணப்படுத்தும்.
  • விலாம்பழத்திற்கு  ரத்தத்தில் கலக்கும் நோய்  அணுக்களை  சாகடிக்கும்  திறன் உண்டு.  எனவே எந்த நோயும்  தாக்காமல்  பாதுகாக்கும்.  முதியவர்களின்  பல்  உறுதி  இழப்பிற்கு  விளாம்பழம்  நல்ல மருந்து.
    மேலும்  இது போன்ற சமையல் குறிப்புகள் மற்றும் மருத்துவக் குறிப்புகள், ஹெல்த் டிப்ஸ்,  அழகுக் குறிப்புகள், போன்றவற்றை  தெரிந்து கொள்ள இந்த இணயதளத்தை  பின்பற்றவும். மேலும் உங்களுக்கு வேரேதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கமென்ட் செய்யவும்.  மேலும் எங்களை ஃபேஸ்புக்கிலும்  தொடர்பு  கொள்ளலாம். 

விக்கல் ஏன் ஏற்படுகிறது. அதற்கான காரணங்கள் என்ன?

     
   இக்கட்டுரையில்  நாம் காணப்போவது  விக்கல் எதனால் ஏற்படுகிறது, அதற்கான காரணங்கள்   என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

விக்கல்  ஏன்  ஏற்படுகிறது :  

  • நமது  நெஞ்சுக்கும்,  வயிற்றுக்கும்  இடையே உள்ள  உதரவிதானம்  என்கின்ற தசைப்பகுதிதான் நாம் சுவாசிக்க,  உதவி  செய்கிறது.
  • நாம் மூச்சை உள்ளிழுக்கும் பொழுது  இந்த  உதரவிதானம்  கீழிறங்கி நுரையீரலுக்குள்  காற்றினை  நிரப்பும்  வேலையைச்  செய்கின்றது.  நாம் மூச்சை  வெளியே  விடும் போது  இந்த  உதரவிதானம்  மேலேறி  நுரையீரலை  அழுத்தி  காற்றை  வெளியேறச் செய்கிறது.
  • விக்கல்  வருவது  இங்கிருந்துதான்.  சில சமயங்களில்  நமது  மார்பு  பகுதியில் உள்ள நரம்புகள்  உதரவிதானத்தை  எரிச்சல்  படுத்தினால்,  இது  மூளையின் கட்டுப்பாட்டை  மீறி தன்னிச்சையாக  திடீர்  திடீரென்று  சுருங்க  ஆரம்பித்து  விடும்.  அப்போது குரல்  நாண்கள்  சரியாகத்  திறப்பதில்லை.
  • அந்த  மாதிரி  நேரங்களில்  நாம்  சுவாசிக்கும்  காற்று  குரல்  நாண்களின்  குறுகிய   இடைவெளி   வழியாத்தான்    நுரையீரலுக்குச்  சென்று  திரும்ப  வேண்டும். அப்போது  அந்தக் காற்று  புல்லாங்குழலில்  காற்றுத் தடைபடும் போது  இசை  ஒன்று  வெளிப்படுவது போல,  ஹிக்  ஹிக்  என்ற ஒரு விநோத ஒலி  எழுப்பப்படுகிறது.  அது தான் விக்கல்.

விக்கல் வருவதர்க்காண  காரணங்கள்:

  1. உணவை  வேகமாகச்  சாப்பிடுதல்
  2. அளவுக்கு  மீறிய  உணவை  உண்ணுதல்
  3. வாயுக்கள்  நிறைந்த  பானங்களை  அருந்துதல்
  4. அளவிற்கு  அதிகமாக  மது அருந்துதல்
  5. வயிற்றில் திடீரென்று  ஏற்படும் வெப்ப மாற்றம்

விக்கல் நிற்பதற்கான  செயல்கள்:

  1. விக்கல் வரும்  போது மெதுவாக  நீர்  அருந்த வேண்டும்
  2. ஒரு ஸ்பூன் சர்க்கரையை  சாப்பிட வேண்டும்
  3. சுமார்  பத்து  முதல்  இருபது வினாடிகள்  மூச்சை  இழுத்து  பிடித்து  விட்டு,  பின்னர் மெதுவாக  மூச்சை வெளிவிட  வேண்டும்.   ஆனால்  இதையும் மீறி   விக்கல்  நிற்க  வில்லையெனில்,  மருத்துவரை  அணுகி  ஆலோசனை  பெறுவது  மேல்.

 தேவை  வயிற்றுக் கட்டுபாடு :

உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் முக்கியக் காரணம்  ரத்தம் சுத்தமாக  இல்லாததுதான்.  இந்த ரத்தத்தை சுத்திகரித்தால்  அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம்.

ரத்தம் சுத்தமானதாக   இருக்க வேண்டுமானால்

உணவு, குடிநீர், மூச்சுக்காற்று, தூக்கம், உடல் உழைப்பு.
      இவை ஐந்தையும்  ஒழுங்கு படுத்த வேண்டும். நாம் சாப்பிடும் உணவு  ஜீரணமாவதர்க்காண  வேலை  வாயிலிருந்து  ஆரம்பிக்கின்றன.
     
மேலும்  இது போன்ற சமையல் குறிப்புகள் மற்றும் மருத்துவக் குறிப்புகள், ஹெல்த் டிப்ஸ்,  அழகுக் குறிப்புகள், போன்றவற்றை  தெரிந்து கொள்ள இந்த இணயதளத்தை  பின்பற்றவும். மேலும் உங்களுக்கு வேரேதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கமென்ட் செய்யவும்.  மேலும் எங்களை ஃபேஸ்புக்கிலும்  தொடர்பு  கொள்ளலாம்.

தலையணை வைத்து தூங்குவது சரயா.... தவறா.....

 
    
     நாம் அனைவரும் இரவில் தலையணை  வைத்து தூங்குவது  பழக்கம்.  ஆனால் தலையணை வைத்து தூங்குவது சரயா  அல்லது   தவறா  என்பதை இக்கட்டுரையில் நாம்  காண்போம்.

தலையணை  வைத்து தூங்கலாமா:

  • இன்றைய  சூழ்நிலையில்  பலருக்கு  தலையணை இல்லாமல் தூக்கம் என்பது உப்பில்லாத  உணவு போலதான்  அவ்வளவு  கஷ்டமாக  இருக்கும். தலையணை வைத்து  உறங்குவது  என்பது  நமது  உடலுக்கு   சுகமானதாக இருந்தாலும்,  அது நமது  உடலுக்கு  தீங்கானது  என சொல்கின்றன.
  • தலையணை வைத்து  உறங்கும்  பழக்கம் என்பது,  ஆதி  வாசிகளிடமோ, அதன் பின்னர்  வந்தவர்களிடமோ  இல்லை என்கிறார்கள்  ஆய்வாளர்கள்.  சாயும்போது,  உட்காரும் போது ஏதேனும் ஒன்றை  ஒத்தாசையாக வைத்து, அதில்  ஒருவித  சுகத்தைக் கண்டு,  அப்படியே  மிருதுவான  தடிமனான  பொருட்களைத்  தலைக்கு வைத்துத் தூங்குவது  வழக்கமாயிருக்கிறது.
  • இந்த பழக்கம்  ஆரம்பத்தில் ராஜாக்கள்,  பெரிய  பணக்காரர்களிடத்தில்  மட்டுமே இருந்தது.  ஆனால்,  நாளடைவில்  இந்த  பழக்கத்திற்கு  அனைவரும் அடிமையாகிவிட்டனர்.  இன்று அது  வளர்ந்து  விதவிதமான,   தலையனைகளாக  ஒவ்வொரு  வீட்டுகளிலும்  இடம் பிடுத்திருக்கின்றன.
  • நாம் நடக்கும் போது  எப்படி உடலை,  நேராக  வைத்து நடக்கிறோமோ, அது போலத்தான்  உறங்கும் போது,   மேடு பள்ளம்  இல்லாத  சமமான தரையில் நேராகப்  படுத்து  உறங்க வேண்டும். அப்படி  படுக்கும் போது,  எக்காரணத்தைக் கொண்டும்  குப்புறப்படுத்து  உறங்கக்கூடாது.   வானத்தைப்  பார்த்துத்தான் தூங்க வேண்டும்.
  • மெத்தையில் படுப்பது,  பஞ்சு  நிரப்பிய  மிருதுவான  தலையணையை  தலைக்கு  வைப்பது  ஆகியவற்றால்,   கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகள் தேய்மானம்  அடையும்  வாய்ப்புகள்  அதிகமாக  உள்ளது. அதுமட்டுமல்லாமல் கழுத்து நரம்புகளும்  பாதிக்கப்படும்.  அதனால்,  மூளைக்குச்  செல்லும்  ரத்த  ஓட்டம்  தடைபட்டு  மூளை  பாதிப்புகளில்  தொடங்கி   பலவிதமான  பிரச்சனைகளுக்கு  அது  வழிவகுக்கிறதாம்.
  • என்னால் தலையணை இல்லாமல்  ஒரு நாளும் தூங்க  முடியாது என்பவர்கள் அதிக  பாதிப்பை  விளைவிக்கக்கூடிய  மெல்லிய,  மிருதுவான,   ஸ்பிரிங்  தன்மையுள்ள  தலையணை   பயன்பாட்டை  தவிர்த்து  குறைவான  பாதிப்பைத் தரும்  தடிமனான  தலையணையை  பயன்படுத்தலாம்.  இவை அதிக உயரம் இல்லாமல்,  சின்னதாகவும்,  இயற்கையான  பொருட்களால் (பிரம்பு  நார் தலையணை ) ஆனதாகவும்  இருக்க  வேண்டும். தலையணையை  தலைக்கு மட்டும் வைக்காமல்,  தோள்பட்டையிலிருந்து  தலை  முழுவதற்கும்  வைப்பது  நல்லது.
      மேலும்  இது போன்ற சமையல் குறிப்புகள் மற்றும் மருத்துவக் குறிப்புகள், ஹெல்த் டிப்ஸ்,  அழகுக் குறிப்புகள், போன்றவற்றை  தெரிந்து கொள்ள இந்த இணயதளத்தை  பின்பற்றவும். மேலும் உங்களுக்கு வேரேதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கமென்ட் செய்யவும்.  மேலும் எங்களை ஃபேஸ்புக்கிலும்  தொடர்பு  கொள்ளலாம்.

வயிற்றுக்கு கட்டுபாடு....... வைத்தியத்திற்கு தடா ....

  
     
     வயிற்றை  கட்டுப்பாடுடன் வைத்தால் மட்டுமே போதும்  மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை. மருத்துவரை  அணுகாமல் இருக்க  நாம் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை  இக்கட்டுரையில் நாம் காண்போம்.

வயிற்றைக்  கட்டுப்பாடுடன் வைத்துக்  கொள்வதற்கான வழிகல்:

  • வீட்டு  பட்ஜட்டில்  மாதந்தோறும்  மருத்துவச் செலவிற்கே  பெரிய அளவில் நிதி ஒதுக்க வேண்டி  இருக்கிறது. இந்த நேரத்தில், ''ரத்த அழுத்தம், நீரிழிவு,  ஆஸ்துமா, கொலஸ்டிரால்  என பல்வேறு  நோய்களையும்  நமது  உணவுக்  கட்டுப்பாட்டாலேயே  தீர்க்க  முடியும்!'' என்கிறார்  ''அனடாமிக்  தெரபி''   என்கிற ''செவி  வழி தொடு  சிகிச்சை  முறையை  பரப்பிவரும்  கோவையைச் சேர்ந்த பாஸ்கர்.
  • உலகில் உள்ள  அனைத்து நோய்களுக்கும்  முக்கியக்  காரணம்  ரத்தம் சுத்தமாக இல்லாததுதான். ரத்தத்தைச் சுத்திகரித்தால்  அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம்.
  • மனித உடலில் சுத்தமான ரத்தத்தை  உருவாக்க உணவு, குடிநீர், மூச்சுக்காற்று, தூக்கம்,  உடல்  உழைப்பு  ஆகிய  ஐந்தையும்  ஒழுங்குபடுத்த  வேண்டும். தமிழர்களுக்கு எப்படி சாப்பிட வேண்டும் என்பதே தெரியவில்லை.  உணவை அள்ளிப்போட்டு  வயிற்றின்  உள்ளே தள்ளுவதற்குத்தான்  வாய்  இருக்கிறது. என்று  பலரும்  நினைக்கிறார்கள்.  இது  தவறு,  சாப்பிடும் உணவு  ஜீரணமாவதற்கான   வேலை  வாயிலேயே  ஆரம்பித்துவிடுகிறது.
  • எக்காரணம்  கொண்டும்  பசித்தால்  மட்டும் தான் சாப்பிட வேண்டும். உணவில்  இனிப்பு,  கசப்பு, துவர்ப்பு,  புளிப்பு, உப்பு, காரம்  என ஆறு சுவைகள்  இடம்  பெறுவது  அவசியம். அப்போதுதான்  உமிழ்  நீருடன்  சேர்த்து நாம் சாப்பிடும் சாப்பாட்டில்  உள்ள சர்க்கரை  நல்ல சர்க்கரையாக  மாறும். மனிதனின் வாயின்  பக்கங்களிலும்  மூன்று  ஜோடி  உமிழ்நீர்  சுரப்பிகள் இருக்கிறன.  இதில் புரோட்டீன், தாது உப்புக்கள்  மற்றும்  அமைலேஷ்  என்கிற என்ஸைம்  போன்றவை இருக்கின்றன.
  • இந்த என்ஸைம் நாம்  சாப்பிடும்  உணவு   வேகமாக  ஜீரணமாக  உதவுகிறது. வாயிலேயே  உணவு  நன்றாக மெல்லப்படுவதால்,  இரைப்பையில்  ஜீரணத்துக்காக எடுத்துக்கொள்ளும் சிரமத்தை குறைக்கப்படுகிறது. இவ்வாறு மென்று சாப்பிடும்  போது  ஆரம்பத்தில்  சில தினங்களுக்கு தாடை  வலிக்கும். ஆனால், போகப்போக  பழகிவிடும்.
  • சாப்பிடுவதற்கு   அரை மணி  நேரம் முன்னும் பின்னும்  கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பாட்டு வேளையில்  மனித வயிற்றில்  உணவு  ஜீரணமாவதற்கான  திரவம்  சுரந்திருக்கும். அந்த  நேரத்தில்  தண்ணீர் குடித்தால்,  அந்த திரவத்தின் தீவிரம் குறைந்து  உணவு சரியாக ஜீரணமாகாது. குளித்த  பின் சுமார் 45  நிமிடம் கழித்துதான் சாப்பிட வேண்டும்.  சாப்பிட்ட பிறகு இரண்டரை  மணி நேரத்துக்குள் குளிக்கக்கூடாது!'' -நம்மில் எத்தனை பேர் இதனை கடைப்பிடிக்கிறோம்  என்பது  தெரியவில்லை.
  • ''டி.வி. பார்த்த படி,  புத்தகம்  பார்த்த படி,  பேசியபடி சாப்பிடக்கூடாது. நாம்  எதைச் செய்கிறோமோ  அதற்கு  ஏற்றபடி தான் என்ஸைம்  சுரக்கும். ஜீரணமாவதற்கான   என்ஸைம் சுரக்காது. ஒருவர்  எத்தனை  இட்லி  சாப்பிடலாம்? எத்தனை  சப்பாத்தி  சாப்பிடலாம்  என்பதை  வரையறுக்க  முடியாது.
  • இந்த  உணவு  பலகாரத்தின்  அளவு  ஒவ்வொரு  வீட்டிலும்  வெவ்வேறாக  இருக்கும். சாப்பிட்டால்  இருக்கிற  கார்போஹைட்ரேட்  என்கிற மாவு  சத்து தான்   சர்க்கரையாக  மாறுகிறது.  வெள்ளை சர்க்கரை என்கிற சீனியை  பயன்படுத்துவதை நிறுத்தினாலே  பாதி நோய் குணமாகி விடும்.   அதை விஷம் என்று தான் சொல்ல வேண்டும்.  இனிப்பு தேவை என்கிற போது தேன்,  வெல்லம்,  கருப்பட்டி  போன்றவற்றைப் பயன்படுத்திக்  கொள்ளலாம்.  நான் சொல்வது  ஒன்றும் புதிய விஷயங்கள்  அல்ல. அன்றே நம் முன்னோர்கள், ''நொறுங்கத்  தின்றால்  நூறு வயது  வாழலாம்''  என்று சொல்லி இருக்கிறார்கள்.  இனியாவது  செலவு  மருந்து இல்லாத,  அனாடமிக்  தெரபி  முறைப்படி  சாப்பிட்டு  நலமோடு  வாழ  முயற்சி  செய்யுங்கள்!''
    மேலும்  இது போன்ற சமையல் குறிப்புகள் மற்றும் மருத்துவக் குறிப்புகள், ஹெல்த் டிப்ஸ்,  அழகுக் குறிப்புகள், போன்றவற்றை  தெரிந்து கொள்ள இந்த இணயதளத்தை  பின்பற்றவும். மேலும் உங்களுக்கு வேரேதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கமென்ட் செய்யவும்.  மேலும் எங்களை ஃபேஸ்புக்கிலும்  தொடர்பு  கொள்ளலாம்.

தண்ணீர் மற்றும் வெந்நீர் அருந்துவதினால் கிடைக்கும் பயன்கள்

     
   சரியான நேரத்தில்  தண்ணீரை  அருந்துவதினால்  கிடைக்கும் பயன்கள் மற்றும் வெந்நீர் குடிப்பதனால் கிடைக்கும் பயன்களை  இக்கட்டுரையில் நாம் காண்போம்.

 தண்ணீரை  அருந்துவதினால்  கிடைக்கும் பயன்கள்                        

  • தூக்கத்திலிருந்து  விழித்ததும்  அருந்தும்  இரண்டு டம்ளர்  நீரால் உள்ளுறுப்புகள்  சுறுசுறுப்படையும்.
  • சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு  முன் அருந்தும் ஒரு டம்ளர்  நீரால் ஜீரணம் அதிகரிக்கும்.
  • குளிப்பதற்கு  முன் அருந்தும் ஒரு டம்ளர்  நீரால்  தாழ்வு  ரத்த  அழுத்தத்திற்கு உதவும்.
  • தூங்கும் முன் அருந்தும் ஒரு டம்ளர்  நீரால் மாரடைப்பிலிருந்து  தப்பலாம்.

வெந்நீர்  குடிப்பதால்  கிடைக்கும் நன்மைகள் :

  • உணவு அருந்துவதற்கு  அரை மணி நேரத்திற்கு  முன்பு,  ஒரு டம்ளர்  வெந்நீர் குடித்தால்  உடல்  எடை  குறையும்.
  • அதிகமாக  தாகம் எடுத்தால்,  பச்சை தண்ணீரை குடிக்காமல்,  வெது வெதுப்பான வெந்நீரைக்  குடித்து வந்தால்,  உடம்பில் உள்ள வேண்டாத  கழிவுகள்  வெளியேறும்.
  • சுக்கு  கலந்த வெந்நீரை  அடிக்கடி குடித்து வந்தால்,  வாயுத் தொல்லையே இருக்காது.
  • அடிக்கடி   வெந்நீர்  குடிக்கும்  பழக்கம் உள்ளவர்களுக்கு  அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி  வரவே வராது.
  • வெந்நீர்  குடிப்பதால் ரத்தத்தில்  உள்ள  நஞ்சு  வெளியேறும்.,
  • வயிற்றுப் புண்ணினால் ஏற்படும்  வலியை  குறைக்க,  மிதமான  சூடான வெந்நீரைச்  சிறிது சிறிதாகக்  குடிப்பது  நல்லது.
  • நல்ல  பலமான விருந்து  சாப்பிட்ட  பிறகு  வெந்நீரைக் குடித்தால்,  சாப்பிட்ட உணவானது எளிதில் ஜீரணமாகி விடும்.
  • மிருதுவான சருமம்  பெற,  பார்லி  ஒரு  தேக்கரண்டி  போட்டு  வேகவிட்ட வெந்நீரை  அடிக்கடி குடித்து வர   வேண்டும்.
  • தினமும்  ஒரு  டம்ளர்  வெந்நீர்  குடித்து  வந்தால்,  இளமையில்  முதுமை வராது.
  • பித்தவெடிப்பு  உள்ளவர்கள்  வெந்நீரில்  கால்  பாதங்களை வைத்து  எடுத்து பிறகு,  பாதங்களை  பியூமிஸ்  ஸ்டோன்  கொண்டே தேய்த்தால்,  நாளடைவில் பித்த வெடிப்பு  குணமாகிவிடும்.
  • வெது வெதுப்பான நீரை  ஒரு  டப்பில்  ஊற்றி,  அதில்  கல் உப்பையும்  போட்டுக் கலக்கவும். அந்த  வெந்நீரில்,  கால் பாதங்களை பதினைந்து நிமிடங்கள்  வைத்து  எடுத்தால்  கால்  வலி  குறையும்.
     மேலும்  இது போன்ற சமையல் குறிப்புகள் மற்றும் மருத்துவக் குறிப்புகள், ஹெல்த் டிப்ஸ்,  அழகுக் குறிப்புகள், போன்றவற்றை  தெரிந்து கொள்ள இந்த இணயதளத்தை  பின்பற்றவும். மேலும் உங்களுக்கு வேரேதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கமென்ட் செய்யவும்.  மேலும் எங்களை ஃபேஸ்புக்கிலும்  தொடர்பு  கொள்ளலாம்.

Thursday, December 27, 2018

அசைவ கேக் செய்வது எப்படி?

   
     இக்கட்டுரையில் நாம் காணப்போவது என்னவென்றால் கேக் வகைகள் செய்வதற்கான  செய்முறைகள.

ஸ்பாஞ்ச்  கேக் 

தேவயானவை 

   முட்டை 250 கிராம், பொடிக்கப்பட்ட சீனி 250 கிராம், பேக்கிங் பவுடர் 4 தேக்கரண்டி(தலை தட்டிய அளவு), வெண்ணிலா அல்லது பைனாப்பில் எசன்ஸ் 1 தேக்கரண்டி மைதா 250 கிராம், வெண்ணெய் 250 கிராம்.

செய்முறை 

      பேக்கிங் பவுடரை மைதா மாவுடன் கலந்து நன்றாக சளித்துக்கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முட்டைகளை ஊற்றி எலக்ட்ரிக் பீட்டர் உதவியால் அடிக்கவும். வேறொரு பாத்திரத்தில் வெண்ணெயைப் போட்டு நன்றாக கிரீம் ஆகும் வரை கடயவும். இடையிடையே அடித்து வைத்திருக்கும் முட்டையையும் இதில் கொஞ்சமாக சேர்த்துக்கொண்டே கடயவும். எசன்ஸ்
சேர்க்கவும். இதனுடன் ஏற்கனவே பேக்கிங் பவுடருடன் சேர்த்து சலித்து வைத்திருக்கும் மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கலக்கவும். மாவு சேர்ந்த பின்  வேகமாக கடையக்கூடாது. அகலமான கரண்டியால் கலக்கவும். எலக்ட்ரிக் பீட்டரில்  ஸ்லோ என்ற குறைந்த அளவு வேகத்தை உபயோகிக்கவும். இப்போது நமக்குத்தேவயான டெலீசியஸ் கேக் ரெடி.

செர்ரி கேக் 

தேவயானவை 

   வெண்ணெய் 100 கிராம், சீனி 100 கிராம், பேக்கிங் பவுடர் 1 தேக்கரண்டி, செர்ரி 150, பால் 2 மேஜைக்கரண்டி, மைதா 200 கிராம், முட்டை 2  கொஞ்சம்
பொடியாக நறுக்கிய எலும்பிச்சம்பழத் தோல்.

செய்முறை 

      மாவையும்,  பேக்கிங் பவுடரையும் சளித்துக்கொள்ளவும். வெண்ணெய், சீனி, எலும்பிச்சம்பழத் தோல் சேர்த்துக் கடையவும். கொட்டை நீக்கிய செர்ரியை பாதியாக நறுக்கி கொஞ்சம் மாவில் புரட்டி தனியாக வைக்கவும். பின் மீதி மாவையும், கலவையுடன் பால் சேர்த்துக் கலக்கவும். முடிவில் செர்ரி கலந்த மாவைச்சேர்க்கவும். எண்ணெய் தடவிய கேக் பாத்திரத்தில் கலவையை ஊற்றி ஓவனில் 350 டிகிரி உஷ்ணனிலயில் ஒன்றரை மணி நேரம் வேக வைக்கவும்.

ராக் கேக் 

தேவயானவை  

  வெண்ணெய் 125 கிராம், பேக்கிங் பவுடர் 2 தேக்கரண்டி, சீனி 125 கிராம், மாவு 250 கிராம், முட்டை 2, பிளம்ஸ் 50 கிராம், வெண்ணிலா எசன்ஸ்.

செய்முறை 

     வெண்ணெயையும் சீனியயும் நன்கு கலக்கவும். முட்டையை நன்கு அடித்து கலக்கவும். மாவுடன் பேக்கிங் பவுடரைச் சலித்து, பாதி மாவை வெண்ணெய்க் கலவையுடன் கலக்கவும். பிளம்ஸ், எசன்ஸ் கலந்து மீதமுள்ள மாவையும் கலந்து விடவும். ஒரு பிஸ்கட்   டிரேயில்   வெண்ணெய் தடவி இந்தக் கலவையை குவியல் குவியலாக தேக்கரண்டி கொண்டு ஊற்றி, கேக் அடுப்பில் வேக வைக்கவும்.

    மேலும்  இது போன்ற சமையல் குறிப்புகள் மற்றும் மருத்துவக் குறிப்புகள், ஹெல்த் டிப்ஸ்,  அழகுக் குறிப்புகள், போன்றவற்றை  தெரிந்து கொள்ள இந்த இணயதளத்தை  பின்பற்றவும். மேலும் உங்களுக்கு வேரேதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கமென்ட் செய்யவும்.  மேலும் எங்களை ஃபேஸ்புக்கிலும்  தொடர்பு  கொள்ளலாம்

திராட்சை பழம் மற்றும் மாம்பழத்தின் மருத்துவ நலன்கள்.


 இக்கட்டுரையில் நாம் காணப்போவது திராட்சை பழம் மற்றும் மாம்பழங்கள் சாப்பிடுவதால்  ஏற்படும் நன்மைகள்  மற்றும் அதன் மருத்துவக் குணங்கள்.

திராட்சை பழத்தின் நன்மைகள்:

  •  ஊட்டச் சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று.  இதில் வைட்டமின் ''பி1, பி2, பி3, பி6, பி12, சி,  இரும்புச் சத்து ,  பாஸ்பரஸ் போன்ற சத்துப் பொருட்கள் உண்டு.
  • உடல் வறட்சி பித்தம் நீங்கும், ரத்தம் தூய்மை பெரும்.  இதயம், கல்லீரல், மூளை  நரம்பு  வலுபெறுவதுடன்  செரிமான கோளாறுகள் நீங்கும்.
  • இதயம் பலவீனமாக இருந்தாலும்,  அடிக்கடி  படபடப்பு  ஏற்பட்டாலும், திராட்சை பழத்தை  பன்னீரில் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து  அதை அப்படியே பிசைந்து வடிகட்டி சிறிது சிறிதாக  அருந்தி வர இதயம்  பலப்படும், படபடப்பு  நீங்கும்.
  • உலர்ந்த திராட்சைப்பழத்தை பாலில்  இட்டு  காய்ச்சி  குடித்துவர  மலச்சிக்கல் தீர்வதுடன்  நாவறட்சி  மற்றும்  மயக்கமும் நீங்கும்.
  • உலர்ந்த திராசைப்பழங்களை இரண்டாக பிளந்து இரவில் நீரில் ஊறப் போட்டு, காலையில் அதை பிசைந்து எடுத்து,  சுத்தமான நீரில் சிறிது  நெல்லிக்காய் சாரு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகக் கோளாறுகள் குணமடையும்.
  • திராச்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர  கல்லடைப்பு நீங்கும்.
  • கருப்பு  திராச்சைப் பழச்சாறு 200 மி.லி. தினமும் இரண்டு  வேலை அருந்தி வர அதிகப்படியான கொழுப்புச்சத்து  குறையும்.
  • திராட்சையால் குடல் புண் ஆறும். கல்லீரல், மண்ணீரல்  கோளாறு  நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
  • திராட்சை  நல்ல உறக்கத்தை தருவதுடன்,  ரத்த சோகையை போக்கும் தன்மை  உடையது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நிவர்த்தி  செய்வதுடன் காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினமும் திராச்சைப் பழம் சாப்பிட்டு  வர அந்த நோயின் தன்மை குறையும்.

மாம்பழத்தின் நன்மைகள்

  • முக்கனிகளில் முதன்மையானது  மாம்பழம் தான். இது  உடலுக்கு உஷ்ணம்  ஏற்படுத்துவதுடன் மலம்  இலக்கியாகவும்  செயல்படுகிறது.  மேலும் மாங்காய் தோலில்  உள்ள  சத்துப் பொருட்கள் சர்க்கரை நோய்,  கொலஸ்டிரால்  போன்றவற்றைக்  கட்டுப்படுத்துவதுடன்  சில  புற்று  நோய்களுக்குச்  சிறந்த  மருந்தாகவும்  பயன்படுகிறது.
  • மாங்காய் தோலில் உள்ள இரும்புச்சத்து  ரத்த சோகைக்கு மருந்தாக பயன்படுகிறது.
  • மாங்காய் தோலில் ''ரெஸ்வெரடிரால்''  என்ற பொருள் அதிகமாக உள்ளது. இது தான் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைத்து கொலஸ்டிரால் வராமல் தடுக்கிறது.  மேலும் அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக்  குறைக்கிறது. 
மேலும்  இது போன்ற சமையல் குறிப்புகள் மற்றும் மருத்துவக் குறிப்புகள், ஹெல்த் டிப்ஸ்,  அழகுக் குறிப்புகள், போன்றவற்றை  தெரிந்து கொள்ள இந்த இணயதளத்தை  பின்பற்றவும். மேலும் உங்களுக்கு வேரேதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கமென்ட் செய்யவும்.  மேலும் எங்களை ஃபேஸ்புக்கிலும்  தொடர்பு  கொள்ளலாம்.

எறாவில் புட்டு, சாதம் செய்வது எப்படி?


    இக்கட்டுரையில் நாம் காணப்போவது எறாவில் புட்டு, சாதம் செய்வதர்க்காண சமையல் குறிப்புகள்.

எறாள் புட்டு

தேவயானவை

    எறா கால் கிலோ, இறநூறு கிராம் வெங்காயம், ஆறு பச்சை  மிளகாய்,  நூறு கிராம் எண்ணெய், இஞ்சி ஒரு சிறு துண்டு, ஒரு டீஸ்பூன் மிளகாய்பொடி,  நான்கு பூண்டு, மஞ்சள்பொடி,  கறிவேப்பிலை தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும்.

செய்முறை

    எறாவை  தோலை நீக்கிச் சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு பாதி  உப்பு, மஞ்சள்பொடி  போட்டு 200 மி.லி. தண்ணீரில் விட்டு  அடுப்பில் வைக்கவும்.  பாதி  வெந்ததும்  இறக்கி எறாவை  மாத்திரம் எடுத்து  அம்மியில் வைத்து அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.  அரைத்த  எறாவில் மிளகாய் பொடியைப் போட்டு பிசையவும்.
வாணலியை  அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும்  நறுக்கி  வைத்த வெங்காயம், பச்சை   மிளகாயைப் போட்டு வதக்கி, அரைத்த  மசாலாவைப்  போட்டுக்  கிளறி  எறாவைப்  போட்டு நன்றாகக்  கிளறி மீதி உப்பையும் கறிவேப்பிலையையும், போட்டு  அடுப்பிலேயே வைத்திருக்கவும். எறா நன்றாகப் பொன் நிறமாக வந்ததும்   இறக்கி உபயோகிக்கவும்.

எறாள் சாதம்

தேவயானவை

    எறா கால் கிலோ, சாதம் இரண்டு கப்(குலையாதது),  பெரிய வெங்காயம் இரண்டு,  தக்காளி  ஒன்று, பச்சை  மிளகாய் ஒன்று, எலும்மிச்சை  சாரு ஒரு ஸ்பூன், பூண்டு ஐந்து கப், ஒரு ஸ்பூன் சோம்பு, மஞ்சள்தூள்  சிறிதளவு,  மிளகாய்த்தூள்  ஒரு ஸ்பூன், நெய் ஒரு ஸ்பூன், உப்பு  எண்ணெய் தேவையானவை.

செய்முறை

    எறாவை சுத்தம் செய்யவும். வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். பூடைத் தட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து கறிவேப்பிலை   போட்டு வதக்கி,   தக்காளி    பூண்டு    போட்டு    வதக்கவும்.  எறாவை  மிளகாய்த்தூள்,   மஞ்சள்தூள்,   உப்பு போட்டு பிசரி   வைத்து வதக்கியதுடன்   சேர்த்து   சிறிது   தண்ணீர்  விட்டு   வேக   வைக்கவும்.
எறா வெந்து  தண்ணீர் வர்ரியவுடன்  எலுமிச்சை பழச்சாறு  சேர்த்து அதனுடன் சாதத்தை போட்டு கிளறி,  நெய் ஒரு ஸ்பூன் ஊற்றிக் கிளறி இறக்கவும்.

   மேலும்  இது போன்ற சமையல் குறிப்புகள் மற்றும் மருத்துவக் குறிப்புகள், ஹெல்த் டிப்ஸ்,  அழகுக் குறிப்புகள், போன்றவற்றை  தெரிந்து கொள்ள இந்த இணயதளத்தை  பின்பற்றவும். மேலும் உங்களுக்கு வேரேதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கமென்ட் செய்யவும்.  மேலும் எங்களை ஃபேஸ்புக்கிலும்  தொடர்பு  கொள்ளலாம். 

வியர்வை நாற்றத்தை போக்குவத்தர்காண சில குறிப்புகள்

 
 இக்கட்டுரையில் நாம் காணப்போவது வியர்வை நாற்றம் ஏற்படுவதற்கான காரணம் மற்றும் கட்டுப்படுத்துவதற்குச் செய்ய வேண்டிய சில வலிகள்.
   வெளித்   தோற்றத்திற்கு    அழகாக,   ஸ்டைலாக  இருப்பது    முக்கியமல்ல. உடலில்   துர்நாற்றங்கள் ஏற்படா  வண்ணம் சருமத்தை   பராமரிப்பதே  முக்கியமான விஷயம். கண்ணிற்கு அழகாக தோற்றமளித்து அருகில் வரும் போது  துர்நாற்றத்தால் முகம்  சுளிக்கும் நிலை ஏற்படுவது  மிகவும் வருந்தத் தக்க  விஷயம்.  இந்த  வியர்வை நாற்றத்தால் வாழ்க்கையில் பல சிக்கல் தோற்றுவிக்கப்படுகிறது.

வியர்வை நாற்றம் ஏற்படுவதற்கான காரணங்கள்

  • பொதுவாக நம் உடலில் ஏற்படும் துர்நாற்றத்திற்கு  நம்  மனம்  மற்றும் உடல் இரண்டுமே  காரணமாகும. நம் மனதில்  ஏற்படும்   பலவகை   உணர்ச்சிகளின்  காரணமாக   வியர்வை நாற்றம் ஏற்படுகிறது.  அதிக  சந்தோஷம்,  அதிக  துக்கம்,  அதிக  பதற்றல்,  அதிக செக்ஸ் உணர்வு போன்றவை ஏற்படும் போது மனநிலை கட்டுப்பாட்டை மீறுகிறது. இந்நேரம்  சுரப்பிகள்  வேகமாகச் செயல்பட தொடங்குகின்றண. அந்தச் செயல்பாட்டால் நிறமோ, மணமோ இல்லாத திரவங்கள் வெளியே வருகின்றன. அந்த திரவத்தில் பாக்டீரியாக்கள் சேருகின்றன.  அதன் கூடவே வியர்வையும் சேருவதால் நாற்றம் உருவாகிறது.
  • மேலும் நாம் உண்ணும் உணவைப் பொருத்தும் சுரக்கும் சுரப்பிகளின் நாற்றம் ஏற்படுகிறது.  கிராம்பு,  ஏலக்காய்,  கருவாப்பட்டை,  வெங்காயம், பூண்டு மற்றும் சில வகை மீன்களை அதிகம் சாப்பிட்டால் உடல்  திரவத்தின் நாற்றம் அதிகமாக இருக்கும். குண்டுப் பெண்களிடம் பாக்டீரியாக்களின் செயல்பாடு அதிகமாய் இருப்பதால் அதிக நாற்றம்  ஏற்படும். நீரிழிவு நோய் உள்ளவர்களிடமும் பாக்டீரியாக்களின் அதிக செயல்பாடு காரணமாக துர்நாற்றம் அதிகம் ஏற்படும்.

வியர்வை நாற்றத்தைக் கட்டுப்படுத்த  செய்ய வேண்டியவை;

  • கீரைகள், ஆரஞ்சுப்பழம், அண்ணாச்சிப்பழம்  ஆகியவற்றை  நிறையச் சாப்பிடுங்கள்.  இவற்றிலுள்ள  நார்ச்சத்து திரவ உற்பத்தியைக்  குறைக்கும் தன்மை கொண்டதால் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கபடும்.
  • உடலில் அதிக வியர்வையுள்ள  பகுதிகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி பவுடர் பூசிக் கொள்ளவும்.
  • நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • பாக்டீரியாக்களின் செயல்பாட்டை குறைக்க தினமும் இரவும் பகலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
  • உடலை மட்டும் சுத்தமாக வைத்தால்  போதாது. உடையிலும் சுத்தம் தேவை. முக்கியமாக உள்ளாடைகள் அதிக சுத்தமானதாக இருக்க வேண்டும். இல்லையெனில் சொறி,  சிரங்கு, அரிப்பு போன்ற சரும நோய்கள் ஏற்படும் அவ்விடங்களில்  சிவந்தும் தடிப்பு ஏற்படும் எரிச்சலை உண்டாக்கும்.
  • காட்டன் துணிவகைகள்  வியர்வையை  உறிஞ்சி எடுக்க  ஏற்றவை. ஆதலால் பெரும்பாலும் காட்டன் துணிகளையே  உடுத்துதல் நலம்.
  • மனதை எப்போதும் அமைதியாக வைத்திருங்கள். உணர்ச்சிகளை எப்போதும் எல்லை மீர  விடக்கூடாது.
  • பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பையே உபயோகிக்க வேண்டும். உள்ளங்கால் பகுதி  சிலருக்கு அதிகமாக வியர்க்கும்.  அவ்வாறானவர்கள் காற்று படும்படியான செருப்புகளையே  அணிய வேண்டும். இருக்கமான சூக்கலை  அணியக்கூடாது. சூ அணியும் போது சாக்ஸ்களைத்  தினமும் துவைத்து அணிய வேண்டும். பிளாஸ்டிக், ரப்பர்  செருப்புகளை அணியக் கூடாது.
  • கை, கால்களை சுத்தமான நீரால் சோப் உபயோகித்துக் கழுவி, சுத்தமான துண்டால் துடைத்து விரல்களுக்கிடையில்  பவுடர் பூச வேண்டும்.  இவ்வாறு செய்து வந்தால் உடல் நாற்றத்திலிருந்து விடுதலை பெறலாம்.
   மேலும்  இது போன்ற சமையல் குறிப்புகள் மற்றும் மருத்துவக் குறிப்புகள், ஹெல்த் டிப்ஸ்,  அழகுக் குறிப்புகள், போன்றவற்றை  தெரிந்து கொள்ள இந்த இணயதளத்தை  பின்பற்றவும். மேலும் உங்களுக்கு வேரேதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கமென்ட் செய்யவும்.  மேலும் எங்களை ஃபேஸ்புக்கிலும்  தொடர்பு  கொள்ளலாம்.

மீன் பொரிப்பது எப்படி? (தந்தூரி மற்றும் சீலா மீன்)

  

 இக்கட்டுரையில் நாம் காணப்போவது என்னவென்றால் தந்தூரி மற்றும் சீலா மீன் பொரிப்பது எப்படி.

தந்தூரி மீன்

தேவையானவை

    சீலா மீன் ஒரு கிலோ,  தயிர் ஒரு பாக்கெட், சின்ன வெங்காயம் இரண்டு, ஒரு எழும்மிச்சைப் பழம், நல்லெண்ணெய்  பொறிக்கும் அளவு, முந்திரிப்பருப்பு  ஒரு மேஜைக்கரண்டி,  வற்றல் தேவையான அளவு,  தேவையான அளவு உப்பு, ஒரு அங்குலம் அளவு இஞ்சி, ஒரு துண்டு பட்டை,  ஏலக்காய் மூன்று, பூண்டு நான்கு பல்,  பிரிஞ்சி இலை, சிவப்பு நிறம் கால் தேக்கரண்டி.

செய்முறை

   மீனைக்கழுவி சுத்தம் செய்து பெரிய துண்டாக வெட்டவும். வெங்காயம், பிரிஞ்சி இலை, பட்டை, இஞ்சி, பூண்டு, ஏலக்காய், முந்திரிப்பருப்பு, வற்றல் யாவற்றையும் அரைத்து உப்பு, சிவப்பு நிறம் சேர்த்து எழும்மிச்சைப் பழம்  பிழிந்து தயிரில் கலந்து மீனை அதில் புரட்டி வைத்து ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஊற விடவும். அடுப்பிலோ அல்லது பேக்கிங் அடுப்பிலோ இந்தத் துண்டுகளை சுட்டு எடுக்கவும். சுடும் போது அவற்றின் மீது எண்ணெய் தடவிக் கொண்டேயிருக்கவும்.

சீலா மீன் பொரித்தல்

தேவையானவை

   சீலா மீன் கால் கிலோ, ஐம்பது  கிராம் வெங்காயம், நல்லெண்ணெய் ஐந்து கரண்டி, எட்டு வற்றல், சீரகம் இரண்டு தேக்கரண்டி,  உப்புத்தூள், மஞ்சள் தூள்.

செய்முறை

   வற்றல் சீரகத்தை அரைத்து சீலா மீனுடன் உப்பு மஞ்சள் சேர்த்து விரவி சிறிது நேரம் வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் காய வைத்து வெங்காயம்  கருவேப்பிலை  போட்டு பாதி வெந்ததும் மீனைச் சேர்த்து இலந்தீயில் மீன் உடையாமல் குலுக்கவிட்டுச் சிவக்க வறுக்கவும்.
குறிப்பு;  சிறிது குழம்பாக விரும்புபவர்கள் நான்கு தேய்ங்காய்ச் சில்லில் கடிப்பால்  எடுத்து மீனுடன் ஊற்றி, நன்றாக கெட்டியாகி எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.
 
    மேலும்  இது போன்ற சமையல் குறிப்புகள் மற்றும் மருத்துவக் குறிப்புகள், ஹெல்த் டிப்ஸ்,  அழகுக் குறிப்புகள், போன்றவற்றை  தெரிந்து கொள்ள இந்த இணயதளத்தை  பின்பற்றவும். மேலும் உங்களுக்கு வேரேதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கமென்ட் செய்யவும்.  மேலும் எங்களை ஃபேஸ்புக்கிலும்  தொடர்பு  கொள்ளலாம்.

முதுமைச்சுருக்கமின்றி இளமை அழகுடன் திகழ வேண்டுமா?

 
  இக்கட்டுரையில் நாம் காணப்போவது  முதுமைச்சுருக்கம் இல்லாமல்  இளமை அழகுடன் இருக்க செய்ய வேண்டியவை.
    முதுமைச்சுருக்கமின்றி   இளமை அழகுடன்  திகழ உண்ண வேண்டிய அழகான உணவுகள்......
  • வைட்டமின்   ''ஈ'' சத்து நிறைந்த  பாதாம்,  பிஸ்தா, முந்திரிப்பருப்பு  போன்ற கொட்டை  வகைகள்,  விதை வகைகளான வேர்க்கடலை,  மொச்சைப் பயறு வகைகளை  அழகிய உணவு வகைகளாக உங்கள் அன்றாட உணவில் அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் மேனி முதுமைச் சுருக்கமின்றி  இளமையுடன் திகளும்.
  • உங்கள் உடம்பின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் ஹை டென்ஸிட்டி லிப்போபுரோட்டீன் சத்து நிறைந்த ஆலிவ் எண்ணெய் உங்கள் மேனியை உலர விடாமல்  ஈரப்பசையுடன்  மின்னிப் பிரகாசிக்கச் செய்யும்.
  • ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து, வைட்டமின்  ''பி12'' , புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து  நிறைந்த மீன் மற்றும் மீன் எண்ணெய் அழகிய உணவு வகைகளில் முதன்மை உணவாகத் திகழ்கிறது.   ஒமேகா 3 கொழுப்பு அமிலச் சத்து உங்கள்  தலையின் மேற்பகுதியை  என்றென்றும் ஈரப் பசையுடன்  வலமாகத்திகழச் செய்து  தலை முடி செழிப்பாக வளர உதவுகிறது.
  • நாள் முழுக்க வேலை செய்தால் கண்கள் சோர்ந்து போகும். அப்போது வைட்டமின் ''ஏ'' சத்து நிறைந்த கேரட்டினை உட்கொள்ளுங்கள். சோர்வு நீங்கி கண்கள் புத்தொலி பெரும். சுறுசுறுப்படைவீர்கள்.
  • கந்தகம் மற்றும் சிலிக்கான் சத்து நிறைந்த பிராக்கோலி இலைகள் நக வளர்ச்சிக்கு மட்டுமின்றி மன அமைதிக்கும் உகந்தது. பிராக்கோலி மர இலைகள் கிடைக்கா விடில் அதற்கு இணையாக காலிபிளவர் மற்றும் பீட்ரூட் இலைகள் நக வளர்ச்சிக்கு பேருதவி புரிகின்றது.
  • வைட்டமின் ''டி'' சத்து நிறைந்த பால், கால்சியம் சத்து நிறைந்த பச்சை கீரை வகைகள்,  பாஸ்பரஸ் சத்து நிறைந்த பூசணி விதை போன்றவைகளும்  அழகிய உணவுப் பட்டியலில் இடம் பெறுகிறது. அவை எலும்பு  வளர்ச்சிக்குத்  துணைபுரிந்து, ஆஸ்ட்டியோபீனியா என்ற எலும்பு தளர்ச்சி மற்றும் வலுவின்மை என்கிற நோயிலிருந்து  காப்பாற்றுகிறது. இந்த உணவு வகைகளை நம் அன்றாட உணவில் அளவோடு உட்கொண்டால் அழகாக வாழலாம்.
  மேலும்  இது போன்ற சமையல் குறிப்புகள் மற்றும் மருத்துவக் குறிப்புகள், ஹெல்த் டிப்ஸ்,  அழகுக் குறிப்புகள், போன்றவற்றை  தெரிந்து கொள்ள இந்த இணயதளத்தை  பின்பற்றவும். மேலும் உங்களுக்கு வேரேதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கமென்ட் செய்யவும்.  மேலும் எங்களை ஃபேஸ்புக்கிலும்  தொடர்பு  கொள்ளலாம்.

பப்பாளி மற்றும் வாழைப்பழத்தின் நன்மைகள்


இக்கட்டுரையில் நாம் காணப்போவது என்னவென்றால் பப்பளிப்பழத்தின் நன்மைகள் எத்தகையது என்று.

பப்பாளி

  • பப்பாளி ஜீரண சக்தியை அதிகரித்து அஜீரணத்தை அஸ்தமணமாக்கும். செரிமான மாத்திரைகள் கூட இந்தப் பப்பாளிப்பழத்தின் பாலில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது.   பப்பாளியின் பால் புரதத்தையே செரிக்க வைக்கக்கூடியது. 
  • எப்பேர்பட்ட மலச்சிக்களையும் இரவு நேரத்தில் சாப்பிட்டு படுத்தால் விளக்கும். கல்லீரலின் வீக்கத்தைக் கூட நீக்கும் தன்மையுடையது.
  • நீரிழிவு நோய் வந்தால் அதற்கு பப்பாளிப்பழத்தையும், நாவர் பழத்தையும் காலை ஒன்றும் மாலை ஒன்றும்  சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் சீராகும். அதே போல்  நரம்பு  தளர்ச்சி,  நரம்பு  வலியெல்லாம்  நீங்கி விடும்.
  • தாய் பால் சுரக்க உதவுவதில் வல்லமை கொண்டது. அதே சமயம் கர்ப்பமான பெண்களுக்கு இது கருக்கலைப்பைக் கூட நிகழ்த்தி விடும்.
  • முகப்பரு உள்ளவர்கள்,  பப்பாளி காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது  முகப் பருக்களை நீக்கி முகம் பொலிவைக் கூட்டி  அழகை வெளிப்படுத்தும்.

வாழைப்பழம்

  • முக்கணிகளில்  ஒன்றாகவே வாழைப்பழம் கருதப்படுகிறது. இக்கணியின் நன்மைகளை காண்போம்.
  • தினமும் வாழை இலையில் உணவு உட்கொண்டு வந்தால் மேனி பளபளப்பாகும். மந்தம், வன்மைக் குறைவு, இளைப்பு போன்றவை நீங்குவதுடன் பித்தம் தணியும்.
  • வாழப் பூவில் வைட்டமின் 'பி' அதிகம் உள்ளது. எனவே இதை அடிக்கடி சமைத்து உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படுத்தும் மாதவிடாய் வயிற்று வலி மற்றும் குடல்  புண்,  ரத்த பேதி, மூல நோய் ஆகியவை குணமடையும்.
  • வாழைத்   தண்டு  சாற்றுக்கு  சிறுநீரை  பெறுக்கும்  தன்மை  உடையது. எனவே   இதை    நீர்ச்சுருக்கு,  எரிச்சல்  போன்றவை  தீர    அருந்தி  வரலாம். மேலும் தேவையற்ற  உடல்  பருமனையும்  இது  குறைக்கும்.  இதை  உலர்த்தி  பொடியாக்கி தேன்  கலந்து  சாப்பிட்டு  வர  காமாலை  நோய்  குணமாவதுடன்   கல்லீரல்  வலுவடையும்.
  • வாழை  பிஞ்சு  மற்றும்  காயினால்  ரத்த  மூலம்,  ரத்தக்கடுப்பு,  வயிற்றுப் புண்,  நீரிழிவு  நோய்  நீங்குவதுடன்   உமிழ்நீர்  அதிகம்  சுரத்தல்,  வயிறுளைச்சல்,  உடல் வெப்பம்,  இருமல்  தணியும்.
  • அடிக்கடி வாழைப்பழம்  சாப்பிடுபவர்களுக்கு  குடல் புண் வராது. உடல் தோல்  பளபளப்பாகும்.  பெண்களுக்கு  மாத  விலக்கு   சீராக வரும்.
  • வாழப்பழம்  அடிக்கடி  சாப்பிடுவதால்  அறிவை  விருத்தி அடையச் செய்யும். இதனுடன் ஏலக்காய்  பொடி  சேர்த்து பிசைந்து சாப்பிட  பெரும்பாடு  குணமடையும்.  வாழப்பழத்துடன்  சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர ரத்த மூலம்  குணமடையும்.
      மேலும்  இது போன்ற சமையல் குறிப்புகள் மற்றும் மருத்துவக் குறிப்புகள், ஹெல்த் டிப்ஸ்,  அழகுக் குறிப்புகள், போன்றவற்றை  தெரிந்து கொள்ள இந்த இணயதளத்தை  பின்பற்றவும். மேலும் உங்களுக்கு வேரேதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கமென்ட் செய்யவும்.  மேலும் எங்களை ஃபேஸ்புக்கிலும்  தொடர்பு  கொள்ளலாம்.

ஒற்றைத் தலைவலிக்கு மன அழுத்தம் தான் காரணமா?

 
   இக்கட்டுரையில் நாம் காணப்போவது ஒற்றை தலைவலிக்குக் காரணம் மன அழுத்தமா  இல்லை வேற காரணங்கள் உண்டா இல்லயா என்பதை பார்ப்போம்.
     ஒற்றைத் தலைவலியால் தற்போது பலதரப்பட்ட மக்களும் அவதிப்பட்டு வருகிறார்கள். ஒற்றை தலைவலிக்குக் காரணம் மன அழுத்தமே. வளைந்து  கொடுக்காத  தன்மையும்  கூட.  மிகுந்த கண்டிப்பும் உள்ள  பலருக்கு  ஒற்றை  தலைவலிப்  பிரச்சினை இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒற்றை தலைவலிக்கும்  வயிறு மற்றும்  பார்வைக்கும்  முக்கிய  தொடர்பு இருக்கிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்திருப்பதும், கண்களை பாதுகாப்பாக வைத்திருப்பதும் முக்கியம்.
    பொதுவாக, குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக்கொள்வது, சத்துக்குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் இல்லாமை, ஓய்வு இல்லாமை, அதிகப்படியான மது, புகைப்பழக்கம் போன்றவை ஒற்றை தலைவலிக்குக்  காரணமாக  அமைகின்றன. ஒற்றை  தலைவலிப்  பிரச்சினை  உள்ளவர்களுக்கு, இடைவிடாது தலைவலி, வாந்தி, உடல் வலி, கண் மங்குதல் வயிற்றுக்கோளாறு  போன்ற பாதிப்புகள்  ஏற்படுகின்றன. ஒற்றைத் தலைவலியால் அவதிப்படும் ஒருவர், எதனால் அது ஏற்பட்டது என்று அறிந்து அதன் படி தீர்வு காண்பதே சிறந்தது.

ஒற்றை தலைவலி   உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டியவை 

  • வைட்டமின்  நியாசின் அதிகமுள்ள உணவு  வகைகளாக முழுக்கோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய  காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவை உண்ண வேண்டும். 
  • இரண்டு மூன்று நாட்களுக்கு பழச்சாறு மற்றும் காய்கறிச்சற்றை மட்டும் பருக்கலாம். நீர் அதிகமாக அருந்த வேண்டும். 
  • இரவில் தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான நீரால் நெற்றிப்பொட்டில்  ஒத்தடம் தரலாம். 
  • தலையில் இறுக்கமான துண்டையோ, பட்டையோ கட்டிக் கொள்ள வேண்டும். 

ஒற்றை தலைவலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை 

  • புகை, மது இவை தலைவலியை தூண்டக்கூடியவை. 
  • வெயிலில் அலைவது.  
  • காரமான உணவு வகைகள். 
  • வயிறு நிறையச் சாப்பிடுவது. 
  • தேவையில்லாத மன அழுத்தம், கவலை. 
    மேலும்  இது போன்ற சமையல் குறிப்புகள் மற்றும் மருத்துவக் குறிப்புகள், ஹெல்த் டிப்ஸ்,  அழகுக் குறிப்புகள், போன்றவற்றை  தெரிந்து கொள்ள இந்த இணயதளத்தை  பின்பற்றவும். மேலும் உங்களுக்கு வேரேதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கமென்ட் செய்யவும்.