இக்கட்டுரையில் நாம் காணப்போவது முகத்தில் எண்ணெய் பசை நீங்குவதற்கான சில அழகுக் குறிப்புகள்.
செய்முறைகள்
- எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவ வேண்டும்.
- வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும் எண்ணெய் வழியமல் முகம் பிரகாசமாக காணப்படும்.(இதை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்ற வேண்டும்.)
- தக்காளி பழத்தை நன்கு பிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரி அல்லது ஓட்ஸ் சேர்த்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.
- பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், கேரட் துருவலை சேர்த்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.
- முகத்தை களுவுவதற்க்கு பதிலாக கடலைமாவை பயன் படத்துவாதல் எண்ணெய் வழிவது குறைவதோடு மாகமும் பளபளப்பாக இருக்கும்.
- மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும்.
- வெள்ளரிக்காய் சாரு, எலுமிச்சை பழச்சாறு, சந்தனத்தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாரு ஆகியவற்றை சம அளவில் எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் எண்ணெய் வழிவது குறையும்.
- சோளத்தை நன்கு பவுடர் செய்து தயிர் மற்றும் எலுமிச்சை சாரு கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தில் எண்ணெய் பசை நீங்கும்.
- எண்ணெய் பசை சருமத்தினர், வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாரு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியான எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.
- எலுமிச்சை சாற்றுடன், முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிரிதி நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.
- பப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் 2 முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.